🕉️ இறைவனை ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவும் ஒரு இறை அனுபவப் பதிவு 🕉️
🌺 இறைவனை ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவும் ஒரு இறை அனுபவப் பதிவு சிவாய நம சாய்ராம் அன்பின் உருவமான குருவின் திருவடிகளை வணங்கி, இந்தப் பதிவை இறைவனின் அன்பை உணர்ந்து கொள்ள உதவும் பதிவாக இங்கு உணர்வுகள் எழுத்துக்களாக அவர் அருளாலேயே வார்த்தைகளாக வடிக்கப்பட்டிருக்கிறது. கருணாமூர்த்தியான இறைவனின் தாமரைப் பாதங்களை வணங்கி இந்தப் பதிவை தொடர்ந்து படிப்போம்! உணர்வில் இறைவனை உணர்வோம்! 🕊️ இறைவனின் முன்கூட்டிய செயல் இறைவன் ஒருவருக்கு கருணை புரிய எத்தனை விஷயங்களை முன்கூட்டி செய்கிறான் என்பதை இந்தப் பதிவு ஆழமாக உணர்த்துகிறது. நம்முடைய அறக்கட்டளை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக ஜகத்குரு ஐயா அவர்களின் சித்த மருத்துவர் குழுவில் இணைந்து பல்வேறு விஷயங்களை ஆழ்ந்து கவனித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இணைந்ததன் மூலம் மனித நேயம் மிக்க கிஷோர் அவர்களின் அறிமுகமும் கிடைத்தது . தன்னால் முடிந்தவரை அடுத்த மனிதருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளத்தை மட்டும் தான் கிஷோர் மற்றும் அவருடைய மனைவி பூரணியிடம் பார்க்க முடியும். 🌧️ வெள்ளம் – புதிய வீடு – இறை அருள் தொடக்கம் டிசம்பர் 2024ல் ஒரு...